விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜம்மு-காஷ்மீர்: 6 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா

ஜம்மு-காஷ்மீரில் 6 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 ஏப்ரல் 2021, 10:05 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் 6 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் பதர்வா பகுதியில் 240 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் தோடா பகுதியில் 3,553 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், பதர்வா பகுதியிலுள்ள செளகம் சந்தையில் மருத்துவக் குழு காவல்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தையில் ஏராளமான புலம்பெயர்த் தொழிலாளர்கள் சந்தையில் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.

அவர்களுக்கும், அங்குள்ள உள்ளூர் மக்களுக்கும் ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 240 புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.