ஜம்மு-காஷ்மீர்: 6 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா

ஜம்மு-காஷ்மீரில் 6 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
ஜம்மு-காஷ்மீர்: 6 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் 6 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் பதர்வா பகுதியில் 240 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் தோடா பகுதியில் 3,553 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், பதர்வா பகுதியிலுள்ள செளகம் சந்தையில் மருத்துவக் குழு காவல்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தையில் ஏராளமான புலம்பெயர்த் தொழிலாளர்கள் சந்தையில் பணிபுரிந்துகொண்டிருந்தனர்.

அவர்களுக்கும், அங்குள்ள உள்ளூர் மக்களுக்கும் ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 240 புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com