ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கரோனா பரிசோதனை: அறிகுறிகளுடன் 4 மணி நேரம் காத்திருக்கும் அவலம்

உத்தரப் பிரதேசத்தில் கரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள 3-4 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2021, 10:34 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் கரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள 3-4 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸிப்பூரில் உள்ள எம்.எம்.ஜி. மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள் பரிசோதனைக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அறிகுறியுடன் 3 முதல் 4 மணி நேரத்திற்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு தொற்று பரவுவதுடன், முதியோர்கள் கடும் வெயிலால் அவதியுறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் பரிசோதனைக் கருவிகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக பரிசோதனை தாமதமாவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.