நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹரியாணா மருத்துவமனையிலிருந்து 1,710 டோஸ் கரோனா தடுப்பூசி திருட்டு

ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் உள்ள பிபிசி மையத்தில் இருந்து 1,710 டோஸ் கரோனா தடுப்பூசி திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
Updated On :22 ஏப்ரல் 2021, 7:34 am

DIN

ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் உள்ள பிபிசி மையத்தில் இருந்து 1,710 டோஸ் கரோனா தடுப்பூசி திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவிஷீல்டு டோஸ் 1,270 மற்றும் கோவாக்சின் 440 டோஸ்கள் மருத்துவமனையில் இருந்து திருடு போயுள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார். 

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறினார். 

காவல்துறை தரப்பிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.