ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா பரவலுக்கு மத்தியிலும் தில்லியில் தொடரும் விவசாயிகளின் போராட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் 140 நாள்களைக் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :22 ஏப்ரல் 2021, 11:16 am

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் 140 நாள்களைக் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கரோனா பரவல், ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் 146 ஆவது நாளை எட்டியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறாமல் நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார். 

'நாங்கள் எங்களுடைய வீட்டில் தான் இருக்கிறோம். கடந்த 5 மாதங்களாக இங்குதான் இருக்கிறோம். இப்போது இது எங்கள் வீடு. இதுவரை இங்கு யாருக்காவது கரோனா வந்ததா? வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை இங்குதான் இருப்போம்' என்று கூறியுள்ளார். 

மேலும், இங்குள்ள விவசாயிகள் பலரும் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இரண்டாவது டோஸ் போட தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு முகாம் அமைத்து தடுப்பூசி போட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இங்கு அனைவரும் சமூக இடைவெளியுடன் தான் இருக்கிறோம். யாரும் கைகொடுப்பதில்லை. முறையாக கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகிறோம்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.