இந்தியா
கரோனா பரவல்: அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நிறுத்தம்
கரோனா தொற்று கடுமையாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை ஆலய நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று கடுமையாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை மேம்பட்டதும் மீண்டும் முன்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. 56 நாள்களுக்கு நடைபெறும் யாத்திரை ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 22 (ரக்ஷா பந்தன்) வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.