யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

'இது உங்களால்தான்'.. மோடியை குற்றம்சாட்டும் ராகுல்

நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், நாட்டில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி கிடைக்காமல் கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் பிரதமர் மோடிதான் என்று

News image
'இது உங்களால்தான்'.. மோடியை குற்றம்சாட்டும் ராகுல்
Updated On :23 ஏப்ரல் 2021, 7:28 am

DIN


புது தில்லி: நாட்டில் நாள்தோறும் கரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், நாட்டில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி கிடைக்காமல் கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3.32 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து 2,263 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளனர். இன்று வரை நாட்டில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.62 கோடியாகவும், பலி எண்ணிக்கை 1.86 லட்சமாகவும் உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், நோயாளிகளின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதற்கு வேண்டுமானால் கரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம். ஆனால், நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கை வசதி இல்லாமல் போனதால் பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கும், மத்திய அரசே, இது உங்களால்தான் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.