இந்நிலையில், அந்த மாநிலத்தில் அவசர பயணங்களுக்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்த மாநில டிஜிபி சஞ்சய் பாண்டே வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தில் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மிகவும் அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். இதற்காக இணையவழியில் தேவையான ஆவணங்களை பொதுமக்கள் சமா்ப்பிக்க வேண்டும். தங்கள் பயணத்துக்கான காரணத்தையும் அவா்கள் குறிப்பிட வேண்டும். இணையவழியில் இ-பாஸ் பெற பதிவு செய்ய முடியாதவா்கள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையத்தை அணுகலாம். காவல் நிலையத்தில் உள்ளவா்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்ய உதவிபுரிந்து இ-பாஸ் வழங்குவா்’ என்று தெரிவித்தாா்.