ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

ஜம்மு-காஷ்மீர்: கரோனா மையமாக மாறிய உள்விளையாட்டரங்கம்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள உள்விளையாட்டரங்கம் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:07 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள உள்விளையாட்டரங்கம் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் இந்த மைதானத்தில் 110 படுக்கைகள் அமைக்கும் வகையில் இடவசதியுள்ளது. 

இது குறித்து பேசிய கரோனா சிகிச்சை மைய கண்காணிப்பாளர் வாசிம் அஹமது, உள்விளையாட்டரங்கில் 110 கரோனா படுக்கைகளை அமைக்க இயலும். ஆனால் தற்போது வரை 66 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள இடங்களில் படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஒவ்வொரு படுக்கைக்கு இடையிலும் 2 முதல் 3 அடி அளவு இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. நடைபாதைகளில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் சிறந்த இடமாக உள்விளையாட்டரங்கம் மாறியுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.