ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கரோனா பரவல்: வாராணசியில் 4 நாள்கள் சந்தைகள் மூட உத்தரவு

உத்தரப் பிரதேசத்தின் வாராணசி மாவட்டத்தில் நான்கு நாள்கள் சந்தைகள் மூட மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :29 ஏப்ரல் 2021, 6:26 am

ANI

உத்தரப் பிரதேசத்தின் வாராணசி மாவட்டத்தில் நான்கு நாள்கள் சந்தைகள் மூட மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், வார இறுதி பொதுமுடக்கம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாரத்தின் முதல் இரண்டு நாள்களும் மூட அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வார இறுதி ஊரடங்கின் போது முழுமையாக மூடப்படும். இருப்பினும்,  வார இறுதி நாள்களின்போது மதியம் 12 மணி வரை அத்தியாவசிய சேவைகள் திறந்திருக்கும். 

கடந்த சில நாள்களில் நகரத்தில் சுமார் கட்டுப்பாட்டு மண்டலங்கள் 700 ஆக அதிகரித்துள்ளது. கரோனா நிலைமையே சமாளிக்கத் தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் கௌசல் ராஜ் சர்மா தெரிவித்தார். 

மாநில சுகாதாரத்துறை தகவலின்படி, 
உ.பி.யில் அதிகபட்சமாக ஒருநாள் பலி எண்ணிக்கை 266 ஆகவும், பாதிப்பு 29,824 ஆகவும் அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.