ஒடிசாவில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் கரோனாவிற்கு எதிரான போரில் சுகாதாரத் துறையுடன் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கரோனா தொற்றுக்கு எதிராக பணியாற்றி வரும் சுகாதாரத் துறை ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து கடந்த 16-ம் தேதி தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒப்பந்த ஊழியர்கள் உள்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


