வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஒடிசா: சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

மாதந்தோறும் ஊதியத்துடன் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒடிசா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2021, 9:34 am

DIN

ஒடிசாவில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் கரோனாவிற்கு எதிரான போரில் சுகாதாரத் துறையுடன் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கரோனா தொற்றுக்கு எதிராக பணியாற்றி வரும் சுகாதாரத் துறை ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து கடந்த 16-ம் தேதி தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒப்பந்த ஊழியர்கள் உள்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.