வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மாநிலங்களின் கையிருப்பில் 3 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 3 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஆகஸ்ட் 2021, 7:59 am

DIN


மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 3 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 49,49,89,550 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு 8,04,220 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இதில் வீணானவை உள்பட மொத்தம் 46,70,26,662 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது ஞாயிறு காலை 8 மணி நிலவரப்படி.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 3 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் (3,00,58,190) இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன."

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60,15,842 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.