ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உ.பி.யில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23-இல் பள்ளிகள் திறப்பு

​உத்தரப் பிரதேசத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :18 ஆகஸ்ட் 2021, 4:39 pm

DIN


உத்தரப் பிரதேசத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

அங்கு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 

இதுகுறித்து மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தது:

"ஆகஸ்ட் 23 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன."

உத்தரப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 27 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 420 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.