ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

அஸ்ட்ராஜெனெகாவைவிட ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் குறைவு எனத் தகவல்

அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:04 pm IST

அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறுகையில், "தொடக்கத்தில், கரோனாவுக்கு எதிராக ஃபைசர்-பயோஎன்டெக்கின் இரண்டு தவணை தடுப்பூசி நல்ல செயல்திறனை வெளிப்படுத்துகிறது. ஆனால், அஸ்ட்ராஜெனெகாவை ஒப்பிடுகையில் ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி பல மாதங்கள் கழித்து பார்த்தால், தீவிரத்தன்மை கொண்ட வைரஸ்கள் மற்றும் அறிகுறிகள் தென்படும் நோய்யுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் வேகமாக குறைகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டு 4, 5 மாதங்களில் இரண்டு தடுப்பூசிகளின் செயல்திறனும் ஒரே மாதிரியாக உள்ளது. நீண்ட கால ஆய்வு மேற்கொள்வது அவசியமாகிறது" என்றார்.

பிரிட்டன் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மற்ற விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு இது இன்னும் அனுப்பப்படவில்லை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு நோய் எதிர்ப்பு சக்தியின் இயக்கவியல் அஸ்ட்ராஜெனெகாவிலும் ஃபைசரிலும் பெரும் வேறுபாடு அடைகிறது என நஃபீல்ட் கல்லூரி மருத்துவ துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 58 சதவிகித மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகும், பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுவருகிறது. அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து கவலை எழுப்பப்பட்ட நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அங்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றவர்களை காட்டிலும் கரோனா வைரஸ் நோயால் பாதிப்படைந்தவருக்கு தடுப்பூசியால் கிடைக்கும் பாதுகாப்பு அதிகரித்துள்ளது என ஆக்ஸ்போர்டு ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.