தில்லியில் குடியரசுத் தலைவருக்கு அறுவைச் சிகிச்சை

தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்(கோப்புப்படம்)
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியரசுத் தலைவரின் செய்தித் தொடர்பு செயலாளர் அஜய் குமார் சிங் கூறியது:

“தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று காலை கண்புரை நீக்க அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், சிகிச்சை முடிவடைந்ததை குடியரசுத் தலைவர் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.”

முன்னதாக கடந்த மார்ச் 30ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com