தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தில்லியில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை

தில்லியில் ஓடும் காரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 8:44 am

DIN

தில்லியில் ஓடும் காரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தில்லி சாஸ்திரி பூங்காவில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தன்னை இரு ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். 

பெண் புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் மற்றும் நிதின் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலமாக அந்த பெண்ணுக்கு இவர்கள் இருவரும் பழக்கமாகியுள்ளனர். பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில்,  வேலை தருவதாகக் கூறி தில்லிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், காரின் எண்ணைக் கண்டறிந்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.