மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தேர்தல் வியூகம்: பஞ்சாப் முதல்வருடன் சித்து சந்திப்பு

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

News image
பஞ்சாப் முதல்வருடன் சித்து சந்திப்பு
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:43 am

ANI

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கடந்த காலங்களில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் அமரீந்தர் - சித்து இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கட்சியின் மேலிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் இருவரிடமும் சமரசம் நிலவி வருகிறது.

இந்நிலையில், 2022இல் நடைபெறவுள்ள பஞ்சாப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியின் மூத்த தலைவரும் முதல்வருமான அமரீந்தர் சிங்கை சந்தித்து சித்து இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ஆளும் கட்சிக்கும் மாநில அரசுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காகவும், பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் சீர்திருத்த முயற்சிகளை விரைந்து செயல்படுத்தவும் 10 பேர் கொண்ட   கொள்கைக் குழு அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.