சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் வெள்ளிக்கிழமை அளித்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று மேலும் 1,668 பேருக்கு கரோனா
கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. 12 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான தரவுகளையும் சைடஸ் கேடிலா நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தது.
இந்நிலையில் சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள சைகோவ்-டி (ZyCoV-D) என்ற தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதலை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அளித்துள்ளது.
உலகின் முதல் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசியான சைகோவ்-டி, மூன்று தவணைகளாக செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.