கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும்; அதன்படி, ஓய்வூதியப் பலன்கள் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடா்பான சாதக, பாதகங்களை 3 மாதங்களில் ஆராய வேண்டும் என்றும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால், நிரந்தர ஆணையம் அமைக்கப்படாததால் பெண் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சிலா், ஆயுதப் படை தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனா். அவா்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவா்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனா்.