பெண்ணுக்கு அங்கு என்ன வேலை? பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் சர்ச்சை கருத்து

மைசூரு பாலியல் வழக்கில் கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமைச்சர் அரகா ஞானேந்திரா
அமைச்சர் அரகா ஞானேந்திரா

மைசூரு பாலியல் வழக்கில் கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலியல் வன்கொடுமை தொலைதூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் அங்கு சென்றிருக்கக்கூடாது. அது ஒரு வெறிச்சோடிய இடம். மாலை நேரத்தில் அவர் அங்கு சென்றிருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கருத்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டப் பெண்ணின் மீதே அமைச்சர் பழிபோடுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் தெரிவித்துள்ளது.

மேலும், காங்கிரஸ் இந்த பிரச்சினையை அரசியலாக்க முயற்சிக்கிறது எனவும் இந்த விவகாரத்தில் தன்னை ராஜிநாமா செய்யக்கோருவது அவசியமில்லாதது எனவும் அமைச்சர் ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அரகா ஞானேந்திராவின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சிவகுமார், 'பாலியல் வன்கொடுமை' எனும் வார்த்தை அமைச்சருக்கு இயல்பானதாக இருக்கிறது. அமைச்சரை பாலியல் வன்கொடுமை செய்த அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com