ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேற்கு வங்க வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பியோடியதாகக் காவல் துறையில் பதிவு: சிபிஐ

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்றதாகக் கூறப்பட்டு வரும் வன்முறை தொடர்பாக மாநில காவல் துறையிடமிருந்து சிபிஐ 60 வழக்குகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 12:10 pm

DIN

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்றதாகக் கூறப்பட்டு வரும் வன்முறை தொடர்பாக மாநில காவல் துறையிடமிருந்து சிபிஐ 60 வழக்குகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிபிஐ இணை இயக்குநர் தலைமையில் விசாரிக்க சிபிஐ 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 109 அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சிபிஐ 11 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அனைத்தும் தெற்குப் பகுதி மாவட்டங்கள்.

இந்த நிலையில் சிபிஐ அதிகாரி ஒருவர் விசாரணை குறித்து தெரிவித்தது,

"17 மாவட்டங்களிலிருந்து 60 வழக்குகள் பெறப்பட்டன. மாநில காவல் துறை நடத்திய விசாரணையின் விவரங்கள், பெரும்பாலான வழக்குகளில் சந்தேகத்துக்குரிய நபர்கள் தப்பியோடிவிட்டதாகக் கூறுகிறது. ஒவ்வொரு வழக்குகளையும் கூர்மையாக ஆய்வு செய்து வருகிறோம்.

காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்படலாம்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.