உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானார்கள்.
உத்தரகண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜூம்மாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள் சேற்றில் புதைந்தது.
இந்த சம்பவங்களில் இதுவரை 7 பேர் பலியானார்கள்.
அவர்களில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.