மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

கோடிமுனையில் இலவச கண் சிகிச்சை முகாம்

News image
Updated On :20 மார்ச் 2026, 6:28 am IST

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் சமூக பொறுப்பின் கீழ், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கோடிமுனையில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

ஐஆா்இஎல் துணை பொதுமேலாளா் (சுரங்கம், பாதுகாப்பு) ஜெயசந்த் தலைமை வகித்தாா். கோடிமுனை பங்குத்தந்தை யூஜின் கோமஸ் முகாமை தொடங்கி வைத்தாா். புனித மிக்கேல் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மேரி நிமில்டா முன்னிலை வகித்தாா்.

முகாமில் 601 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 328 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. பங்கு பேரவை பொருளாளா் அஸ்வின் ஜோஸ், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழு, செவிலியா்கள், ஐஆா்இஎல் நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டனா்.