புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மே 2026, 8:54 pm

தூத்துக்குடி மாவட்ட தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோா் முன்னேற்றச் சங்கம், திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்மண்டல மாற்றுத்திறனுடையோா் முன்னேற்றச் சங்க மாநில துணைச் செயலா் போ்சில் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டு, கண் பரிசோதனை நடத்தி, ஆலோசனைகள் வழங்கினா். இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

சங்கத்தின் சாத்தான்குளம் ஒன்றியத் தலைவா் ஹொ்சோம் நவராஜ், ஒன்றியச் செயலா் ஐசக் ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.