டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படுவதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் விதிக்கப்பட்ட தற்காலிக தடையை எதிா்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
தில்லி உயர் நீதிமன்றத்தில் டெலிகிராம் தடைக்கு எதிரான வழக்கில், புதிய கருப்பு தளம், குற்றவாளிகளை ஒன்றிணைக்கவும் அவர்களது செயல்பாடுகளை மேற்கொள்ளவும் டெலிகிராம் பயன்படுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.
நீட் மறுதோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நோக்கில் ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், ஏற்கெனவே டெலிகிராமில் பகிரப்பட்ட தகவலை சரிசெய்யும் வசதியை (எடிட்டிங் வசதி) 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கவும் டெலிகிராம் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசின் உத்தரவால் சுமாா் 15 கோடி டெலிகிராம் பயனாளா்கள் பாதிக்கப்படுவா் எனத் தெரிவித்திருந்தது. அந்த மனு, உயா் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) இளநிலை மறுதேர்வுகளுக்கு முன்னதாக, ஜூன் 22 வரை இந்தியாவில் டெலிகிராமின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்த அரசின் முடிவை எதிர்த்து டெலிகிராம் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இந்த வாதங்களை முன்வைத்துள்ளது.
"டெலிகிராம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்களை இணைக்கும் ஒரு புதிய டார்க் வெப் தளமாக மாறியுள்ளது. குற்றவாளிகள், டீப் வெப் இணைப்புகள் மூலம் டார்க் வெப் மன்றங்களுடன் இணைக்கும் சேனல்களில் இணைப்புகளைப் பதிவிட டெலிகிராமை விரைவாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், குற்றவாளிகளைக் கண்காணிப்பதும், அவர்கள் மீது குற்றம் சாட்டுவதும் அதிகாரிகளுக்குக் கடினமாகியுள்ளது," என்று மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 2026-இல் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபட்டிருந்த கும்பல்களால் டெலிகிராம் (Telegram) செயலி பயன்படுத்தப்பட்டதாக எழுந்த கவலைகளின் அடிப்படையிலேயே அரசின் இந்த முடிவு எடுக்கப்பட்டது; இந்தக் கசிவு காரணமாகவே அத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
'நீட் மாஃபியா' (Neet Mafia) என்ற டெலிகிராம் சேனல், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான தகவல்களைத் தீவிரமாகப் பரப்பி வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேற்றைய விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா்மேத்தா ஆஜராகி வாதாடுகையில், மனு மீது வியாழக்கிழமை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது அதிா்ச்சியளிக்கும் தகவலை தாம் தாக்கல் செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து விசாரணையை வியாழக்கிழமைக்கு உயா் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில் இன்று மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
டெலிகிராம் தடை
மத்திய அரசின் உத்தரவைத் தொடா்ந்து, இந்தியா முழுவதும் டெலிகிராம் செயலி நேற்று முதல் செயல்படவில்லை. கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் செயலி பதிவிறக்க தளத்தில் இருந்து டெலிகிராம் நீக்கப்பட்டுள்ளது.
Summary
Central Government argues in court that Telegram serves as a haven for criminals and terrorists.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு! டெலிகிராம் நிறுவனம் வழக்கு!

நீட் மறுதோ்வு: டெலிகிராம் செயலி ஜூன் 22 வரை முடக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத பதவி உயா்வு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தல்
தலைமறைவு குற்றவாளிகள் இருவா் கைது
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



