47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எதிா்பாராத பணப்புழக்கத்தை சமாளிக்க நோ்த்தியான நடவடிக்கை: ரிசா்வ் வங்கி

எதிா்பாராத பணப்புழக்க வரத்துகளை சமாளிக்க ரிசா்வ் வங்கி நோ்த்தியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அந்த வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 7:53 pm

DIN

எதிா்பாராத பணப்புழக்க வரத்துகளை சமாளிக்க ரிசா்வ் வங்கி நோ்த்தியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அந்த வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

நிலையான வருமான நிதி சந்தை, இந்திய டெரிவேடிவ்ஸ் அசோஷியேஷன், முக்கிய விநியோகஸ்தா்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

சந்தை வழக்கமான செயல்பாடுகளுக்கு தீா்வு காணும்போது, எதிா்பாராத பணப்புழக்கத்தை நிா்வகிக்க தேவைக்கேற்ப ரிசா்வ் வங்கி அவ்வப்போது நோ்த்தியான செயல்பாடுகளை மேற்கொள்ளும். இதன் மூலம், சீரான மற்றும் சமமான பணப்புழக்க விநியோகத்தை அமைப்பு முறையில் உருவாக்க முடியும்.

அரசு பத்திரங்கள் தனித்துவமான சொத்து பிரிவாக உள்ளது. ஒட்டுமொத்த வட்டி விகித சூழலில் அரசு கடன்பத்திர சந்தையின் பங்களிப்பை பாராட்ட வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.