அணைப் பாதுகாப்பு மசோதா மக்களவையைத் தொடர்ந்து இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக அணைப் பாதுகாப்பு மசோதா மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், இம் மசோதா நீண்ட விவாதத்திற்கு பிறகு மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட அணைப் பாதுகாப்பு மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று விரைவில் சட்டமாகும். அணைப் பாதுகாப்புக்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க அணைப் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.