விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிரத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரம் திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 டிசம்பர் 2021, 2:21 pm


தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரம் திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இந்தியாவிலும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. நாட்டில் ஏற்கெனவே 3 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து கல்யான்-டோம்ப்விலி திரும்பிய 33 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கண்டறியப்படும் முதல் ஒமைக்ரான் பாதிப்பு இது. இதற்கு முன்பு பெங்களூருவில் இருவருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.