‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: காங்கிரஸ் குழு அமைப்பு

நாகாலாந்து ராணுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் திங்கள்கிழமை அமைத்தது.

News image
Updated On :6 டிசம்பர் 2021, 12:53 pm

DIN


நாகாலாந்து ராணுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் திங்கள்கிழமை அமைத்தது.

நாகாலாந்தில் ராணுவத்தினர் நடத்திய மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பொதுமக்கள் 14 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரிக்க 5 பேரைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இந்த சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை விளக்கமளித்தார்.

அவரது விளக்கம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தன. 

இந்த நிலையில், சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவைக் காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்தக் குழுவானது நாகாலாந்து சென்று சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தி ஒரு வாரத்தில் காங்கிரஸ் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள்:

  • ஜிதேந்திர சிங், காங்கிரஸ் பொதுச்செயலாளர்
  • அஜோய் குமார், நாகாலாந்து மேலிடப் பொறுப்பாளர்
  • கௌரவ் கோகோய், எம்.பி.
  • ஆண்டோ ஆண்டனி, எம்.பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.