மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

7 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் 'ஒமைக்ரான்' பாதிப்பு

புணேவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :7 டிசம்பர் 2021, 12:18 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரளில் 7 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இன்று (டிச.7) 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 பேர் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ள கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவற்றில் ஒன்றை போட்டுக்கொண்டவர்கள். 

எஞ்சிய மூவரும் 18 வயதுக்கு குறைவானவர்கள். அதில் ஒன்றரை வயது குழந்தை, 7 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

வழக்கமான கரோனா பரிசோதனையின்போது இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் கடந்த மாதம் 18 முதல் 25-ஆம் தேதி வரை பின்லாந்து நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு 29-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.