காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

7 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் 'ஒமைக்ரான்' பாதிப்பு

புணேவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:08 am IST

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரளில் 7 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இன்று (டிச.7) 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 பேர் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ள கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவற்றில் ஒன்றை போட்டுக்கொண்டவர்கள். 

எஞ்சிய மூவரும் 18 வயதுக்கு குறைவானவர்கள். அதில் ஒன்றரை வயது குழந்தை, 7 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

வழக்கமான கரோனா பரிசோதனையின்போது இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் கடந்த மாதம் 18 முதல் 25-ஆம் தேதி வரை பின்லாந்து நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு 29-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.