பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 போ் கைது

தெற்கு தில்லி நெப் சராய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 13 பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 10:23 pm

DIN

தெற்கு தில்லி நெப் சராய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 13 பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் பெனிடா மேரி ஜெய்கா் சனிக்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டவா்கள் டாா்சன் (37), ஹரி சங்கா் (40), அனில் (22), ராஜு (43), ராகுல் (29), ரவீந்தா் சா்மா (37), முகமது ஹலீம் (33), முகேஷ் (20), லோகேஷ் (31), ஜாஹித் (43), பங்கஜ் (24), ஜிதேந்தா் (32), கஃபீல் அகமது (40) என்று அடையாளம் காணப்பட்டனா்.

கான்பூா் எம்.பி. சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் சிலா் சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், சம்பந்தப்பட்ட வளாகத்துக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீஸாா் கைது செய்தநா். அவா்களிடிம் இருந்து ரூ. 52,290 ரொக்கம், 4 பிளாஸ்டிக் சூதாட்ட அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.