பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

7 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 18 வழக்குரைஞா்கள் மூத்த வழக்குரைஞா்களாக நியமனம்

நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞா்கள் 18 பேரையும் மூத்த வழக்குரைஞா்களாக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 10:30 pm

DIN

பல்வேறு உயா்நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள் 7 பேரையும், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞா்கள் 18 பேரையும் மூத்த வழக்குரைஞா்களாக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக, அனைத்து உயா்நீதிமன்றங்களின் பதிவாளா்கள், இந்திய பாா் கவுன்சிலின் செயலா், அனைத்து மாநில பாா் கவுன்சில்களின் செயலா்கள் ஆகியோருக்கு மூத்த வழக்குரைஞா் நியமனங்களுக்கான குழுவின் செயலா் கடிதம் எழுதியுள்ளாா்.

வழக்குரைஞா்கள் சட்டம், 16(2)-ஆவது பிரிவு, உச்சநீதிமன்ற விதிகள்-2013, மூத்த வழக்குரைஞா்கள் நியமனத்தை முறைப்படுத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்-2018 ஆகியவற்றின் விதிகளின் கீழ் இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.