பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புது தில்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: அனைவரும்?

புது தில்லியில், மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
சத்யேந்தர் ஜெயின்
Updated On :14 டிசம்பர் 2021, 9:08 am

PTI


புது தில்லி: புது தில்லியில், மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நான்கு பேருமே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், புது தில்லியில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்திருப்பதாகவும், அவர்களில் ஒருவர் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாகவும் கூறினார். மற்ற ஐந்து பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், புது தில்லியில், ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை சமூகப் பரவலாக மாறவில்லை. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்து, ஒமைக்ரான் சந்தேகத்தின் அடிப்படையில், 74 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.