கோவாவில் ஆர்.எஸ்.எஸ். ரத யாத்திரை: தொடக்கி வைத்தார் ஜெ.பி.நட்டா

கோவாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரத யாத்திரையை பாஜக தேசியச் செயலாளர் ஜெ.பி.நட்டா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
கோவாவில் ஆர்.எஸ்.எஸ். ரத யாத்திரை: தொடக்கி வைத்தார் ஜெ.பி.நட்டா
Published on
Updated on
1 min read


கோவாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரத யாத்திரையை பாஜக தேசியச் செயலாளர் ஜெ.பி.நட்டா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாள்கள் பயணமாக ஜெ.பி.நட்டா கோவா சென்றுள்ளார். 

அங்கு கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பாஜக உறுப்பினர்களுடனும், களப்பணியாளர்களுடனும் கலந்துரையாடினார். 

அதனைத் தொடர்ந்து இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரத யாத்திரையை கொடி அசைத்து தொடக்கி வைத்தார். 

இதற்கு முன்னதாக மாநில பாஜாக உறுப்பினர்களுடன் நேற்று ஜெ.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாஜக மாநிலத் தலைவர் சதானந்த் தனவாடே உள்பட பலர் கலந்துகொண்டு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com