47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: கிரிப்டோகரன்சி தடையை அறிவிக்காத அரசு

நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக இன்று நிறைவடைந்த நிலையில்  கிரிப்டோ கரன்சி (எண்ம செலாவணி) தடை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

News image
குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: கிரிப்டோகரன்சி தடையை அறிவிக்காத அரசு
Updated On :22 டிசம்பர் 2021, 6:32 am

DIN

நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக இன்று நிறைவடைந்த நிலையில்  கிரிப்டோகரன்சி (எண்ம செலாவணி) தடை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

கடந்த நவம்பர் மாதம், நாட்டின் பொருளாதாரத்துக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கிரிப்டோகரன்சிகள் தீவிர அச்சுற்றுத்தலாக உள்ளது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்ததால் அரசு அதைத் தடை செய்வதாகவும் அதற்கு பதிலாக மத்திய அரசே நெறிப்படுத்தப்பட்ட கிரிப்டோவை அறிமுகப்படுத்துவதாகவும் அதற்கான மசோதா நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது.

மேலும் , நாட்டில் தனியாா் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை விதித்து, ரிசா்வ் வங்கியின் எண்ம செலாவணியை உருவாக்க எளிதான கட்டமைப்பை ஏற்படுத்துவது இந்த மசோதாவின் நோக்கம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அதற்கான எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படாமல் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.