வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சென்னை வழியே ஆந்திரம் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் உறுதி

சென்னை விமான நிலையத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திற்கு சென்ற வெளிநாட்டிலிருந்து வந்த பெண் பயணிக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று உறுதி புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 டிசம்பர் 2021, 6:57 am

DIN

சென்னை விமான நிலையத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திற்கு சென்ற வெளிநாட்டிலிருந்து வந்த பெண் பயணிக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று உறுதி புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி கென்யாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த 39 வயதுடைய பெண், திருப்பதிக்கு கார் மூலம் வந்தார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது டிசம்பர் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரின் மாதிரியை பரிசோதனை செய்ததில் ஒமைக்ரான் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. அவரின் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட பெண் நலமாக உள்ளார். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

இதன்மூலம், ஆந்திரத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.