வெகு காலத்திற்கு முன்பு நம்மிடம் இருந்து பிரிந்த அண்டை நாடு (பாகிஸ்தான்) இந்தியா மீது எப்போதும் மோசமான எண்ணத்தை கொண்டுள்ளது. அது ஏன் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த நாடு ஜம்மு-காஷ்மீரின் உரி மற்றும் புல்வாமா பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதல்களுக்குப் பின்னா் நமது பிரதமா் எடுத்த முடிவால், அந்த நாட்டுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. அங்கு நமது விமானப் படைகள் வான் தாக்குதல் நடத்துவதற்கான அவசியம் இருந்த நிலையில், அது வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அதன் மூலம் இந்தியாவுக்குத் தீங்கிழைக்க யாராவது துணிந்தால் எல்லைத் தாண்டி வந்தும் நம்மால் பதிலடி தரமுடியும் என்பதை தெரியப்படுத்தினோம்.