நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வடகிழக்கு மாநிலங்களில் (மணிப்பூரில்) முதல் ஒமைக்ரான் தொற்று

வடகிழக்கு மாநிலங்களில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :27 டிசம்பர் 2021, 10:05 am

DIN

வடகிழக்கு மாநிலங்களில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. 

அதிகபட்சமாக தில்லி 142, மகாராஷ்டிரம் 141, கேரளம் 57, குஜராத் 49, ராஜஸ்தான் 43, தெலங்கானா 41, தமிழ்நாடு 34, கர்நாடகம் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்சானியா நாட்டில் இருந்து மணிப்பூர் திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இம்பாலில் உள்ள ஜவாஹர்லால் நேரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.