ஜம்மு - காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
ஐ.ஜி. விஜய் குமார்
ஐ.ஜி. விஜய் குமார்
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்பட 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐஜி விஜய்குமார் கூறியதாவது:

அனந்த்நாக் மற்றும் குல்கம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், இரண்டு இடங்களில் மொத்தம் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் பாகிஸ்தான் மற்றும் இருவர் உள்ளூர் தீவிரவாதிகள். மேலும், இரண்டு பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com