ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

இந்தியாவில் 20 கோடியைத் தொட்டது கரோனா பரிசோதனை

​இந்தியாவில் இதுவரை மொத்தம் 20 கோடி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 பிப்ரவரி 2021, 11:10 am


இந்தியாவில் இதுவரை மொத்தம் 20 கோடி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,40,794 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனை எண்ணிக்கை 20 கோடியைத் (20,06,72,589) தொட்டுள்ளது.

நாட்டில் மொத்தம் 2,369 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கை 1,214, தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 1,155. 

கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதமும் 5.39 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. தற்போது 1.5 லட்சத்துக்கும் (1,48,590) குறைவானவர்களே கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 8 மாதங்களில் இதுவே குறைந்தபட்ச எண்ணிக்கை. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் விகிதம் 1.37 சதவிகிதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 95 பேர் பலியாகியுள்ளனர்.

21 நாள்களிலேயே 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 50 லட்சம் தடுப்பூசி என்ற எண்ணிக்கையை வேகமாக எட்டிய நாடு இந்தியா. 

கடந்த 24 மணி நேரத்தில் 10,502 அமர்வுகளில் 4,57,404 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,01,537 பேர் சுகாதாரத் துறை பணியாளர்கள், 1,55,867 பேர் முன்களப் பணியாளர்கள்.

இதுவரை மொத்தம் 1,06,303 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குணமடைவோர் விகிதம் 97.19 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.