இந்தியாவில் மேலும் 11,831 பேருக்கு கரோனா; 84 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,831 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 11,831 பேருக்கு கரோனா; 84 பேர் பலி
Updated on
1 min read

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,831 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,831 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,08,38,194-ஆக அதிகரித்தது. 
கரோனா தொற்றில் இருந்து மேலும் 11,904 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,05,34,505-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றுக்கு மேலும் 84 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,55,080-ஆக அதிகரித்துள்ளது. 
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு தினசரி உயிரிழப்பு மீண்டும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 1,48,609 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 20.19 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இதில், நேற்று மட்டும் 5,32,236 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், நாடு முழுவதும் இதுவரை 58 லட்சத்துக்கும் அதிகமானவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com