சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

‘நாம் இருவர் நமக்கு இருவர் என நாட்டை ஆளும் 4 பேர்’: ராகுல் விமர்சனம்

நாட்டை நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற வகையில் 4 பேர் ஆட்சி செய்து வருவதாக ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

News image
‘நாம் இருவர் நமக்கு இருவர் என நாட்டை ஆளும் 4 பேர்’: ராகுல் விமர்சனம்
Updated On :11 பிப்ரவரி 2021, 1:22 pm

DIN

நாட்டை நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற வகையில் 4 பேர் ஆட்சி செய்து வருவதாக ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல்காந்தி வேளாண் சட்டங்கள் மூலம் பாஜக அரசு விவசாயிகள் பலரை பலி கொடுத்துவிட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும் மண்டி முறைகளை அழிப்பதற்காகவே வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் மண்டிகளை பாஜக அரசு முழுமையாக ஒழித்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார். 

நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற வகையில் நாட்டை நான்கு பேர் ஆட்சி செய்து வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

ராகுல் காந்தி வேளாண் சட்டங்கள் குறித்து பேசியதால், மக்களவையில் பாஜகவினர் கூச்சல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.