உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கரோனா தொற்றுக்கு பலியாகவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது:
"18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு யாரும் பலியாகவில்லை. புதன்கிழமை காலை 8 மணி வரை சுமார் 90 லட்ச தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
61,50,922 சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு முறையும், 2,76,377 சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டு முறையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 25,71,931 முன்களப் பணியாளர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 16 மாலை 4 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 36 பேரில் 22 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்தனர். 2 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர், 12 பேர் பலியாகியுள்ளனர்.
பலியான 29 பேரில் 17 பேர் மருத்துவமனைக்கு வெளியே பலியாகியுள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் பலியாகியுள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தீவிர பக்கவிளைவு ஏற்பட்டதாகவோ, தடுப்பூசி காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒசூரில் 5 ஆவது முறையும் ஆளுங்கட்சி உறுப்பினரா? ஆா்வத்தில் மாவட்ட மக்கள்!

தாமரை மாலை அணிந்து...
இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!

தென்காசி! அதிக வாக்குகள், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


