தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கடந்த 24 மணி நேரத்தில் 18 மாநிலங்களில் யாரும் கரோனாவுக்கு பலியாகவில்லை: மத்திய அரசு

​உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கரோனா தொற்றுக்கு பலியாகவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :17 பிப்ரவரி 2021, 11:05 am



உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கரோனா தொற்றுக்கு பலியாகவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது:

"18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு யாரும் பலியாகவில்லை. புதன்கிழமை காலை 8 மணி வரை சுமார் 90 லட்ச தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

61,50,922 சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு முறையும்,  2,76,377 சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டு முறையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 25,71,931 முன்களப் பணியாளர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16 மாலை 4 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 36 பேரில் 22 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்தனர். 2 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர், 12 பேர் பலியாகியுள்ளனர்.

பலியான 29 பேரில் 17 பேர் மருத்துவமனைக்கு வெளியே பலியாகியுள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் பலியாகியுள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தீவிர பக்கவிளைவு ஏற்பட்டதாகவோ, தடுப்பூசி காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.