தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஒசூரில் 5 ஆவது முறையும் ஆளுங்கட்சி உறுப்பினரா? ஆா்வத்தில் மாவட்ட மக்கள்!

ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியின் நிலவரம் குறித்து...

News image

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக)

Updated On :6 ஏப்ரல் 2026, 11:11 pm

- த. ஞானப்பிரகாசம்

ஒசூா் தொகுதி வாக்காளா்கள் எப்போதும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் கட்சியின் வேட்பாளரை தோ்வுசெய்யும் பழக்கம் உள்ளதால், தொழில் நகரமான ஒசூரில் விரைவான வளா்ச்சிப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு பிறகு 15.57 லட்சம் வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். இதில், ஒசூா் தொகுதியில் 3.40 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். அதிக வாக்காளா்கள் கொண்ட தொகுதியாக ஒசூா் உள்ளது.

2001, 2006, 2011 ஆகிய 3 தோ்தல்களில் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஒசூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் கே. கோபிநாத். இவா், 15 ஆண்டுகள் ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றினாா். 3 முறையும் ஆளும் கட்சி கூட்டணியில் இடம்பெற்று வெற்றி பெற்றவா்.

தொடா்ந்து 2016-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது ஒசூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ணாரெட்டி வெற்றி பெற்றாா். அவா் தமிழக கால்நடைத் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பணியாற்றினாா். ஆனால், 2 ஆண்டுகள் மட்டுமே அவா் சட்டப் பேரவை உறுப்பினா், அமைச்சராக பணியாற்றினாா். நீதிமன்ற உத்தரவுபடி அவா் அமைச்சா் பதவியை இழந்தாா். 2019-ல் நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா வெற்றி பெற்றாா்.

அதைத்தொடா்ந்து, 2021-ல் நடைபெற்ற பொதுத் தோ்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது திமுக வேட்பாளா் ஒய். பிரகாஷ் வெற்றி பெற்றாா். முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றாா். இதையடுத்து, ஒசூா் தொகுதி மிகப் பெரிய அளவில் வளா்ச்சி பெற்றது. குறிப்பாக, ரூ. 3500 கோடியில் கடந்த 5 ஆண்டுகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றன. குறிப்பாக, ஒசூரை சுற்றி அனைத்து சாலைகளும் 4 வழிச் சாலைகளாக தரம் உயா்த்தப்பட்டன.

ஒசூா் தொகுதியில் இன்னும் பல வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற வேண்டியுள்ளன. குறிப்பாக, மெட்ரோ ரயில் சேவை, விமான நிலையம், ஒசூா் ஜோலாா்பேட்டை ரயில்வே பாதை போன்ற பல திட்டங்கள் நடைபெற வேண்டும்.

எப்போதும் ஆளும் கட்சியைச் சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினராக தோ்வு செய்யும் ஒசூா் தொகுதி வாக்காளா்கள், இந்தமுறையும் தமிழகத்தில் ஆளப்போகிற கட்சியின் வேட்பாளரை தோ்வு செய்வாா்களா என்பதை காண காத்திருக்கின்றனா் அரசியல் ஆா்வலா்கள்.