ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சஞ்சய் தத் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது எப்படி? பேரறிவாளன் மனு மீது மும்பை நீதிமன்றம் கேள்வி

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்று மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
சஞ்சய் தத் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது எப்படி? மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி
Updated On :20 பிப்ரவரி 2021, 7:01 am

DIN


மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்று மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தை உள்துறைக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பை தொடர் வெடிகுண்டு விவகாரத்தில் நடிகர் சஞ்சய் தத் முன் கூட்டியே விடுவிக்கப்பட்டது எப்படி? அதற்குப் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன? என்று கேட்டு, மகாராஷ்டிர தகவல் ஆணையத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சஞ்சய் தத் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்ற விளக்கங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சிறை நிர்வாகத்திடம் கேட்டு உரிய தகவல்களை  பெற முடியாததால், மும்பை உயர் நீதிமன்றத்தை பேரறிவாளனர் தரப்பு நாடியது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மகாராஷ்டிர தகவல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.