மகாராஷ்டிரத்திலிருந்து வருபவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழை சமர்பிப்பதை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அந்தப் பரிசோதனை 72 மணி நேரத்துக்குள்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2 வாரங்களில் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்திலிருந்து வந்து பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் பணிபுரிபவர்கள் அவரவர் சொந்த செலவில் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டி. சுதாகர் கூறியது:
"கேரளத்தில் சராசரியாக நாள்தோறும் 4,000 முதல் 5,000 கரோனா பாதிப்புகள் பதிவாகின்றன. மகாராஷ்டிரத்தில் சராசரியாக நாள்தோறும் 5,000 முதல் 6,000 கரோனா பாதிப்புகள் பதிவாகின்றன. இந்த 2 மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்கிறோம். இந்த மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழை சமர்பிக்காவிட்டால் அவர்கள் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான தொழில்நுட்ப வழிமுறைகள்: இந்திய ராணுவம் வெளியீடு

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


