தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மகாராஷ்டிரத்திலிருந்து வந்தால் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: கர்நாடக அரசு

​மகாராஷ்டிரத்திலிருந்து வருபவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழை சமர்பிப்பதை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 பிப்ரவரி 2021, 1:38 pm


மகாராஷ்டிரத்திலிருந்து வருபவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழை சமர்பிப்பதை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது.

அந்தப் பரிசோதனை 72 மணி நேரத்துக்குள்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2 வாரங்களில் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்திலிருந்து வந்து பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் பணிபுரிபவர்கள் அவரவர் சொந்த செலவில் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டி. சுதாகர் கூறியது:

"கேரளத்தில் சராசரியாக நாள்தோறும் 4,000 முதல் 5,000 கரோனா பாதிப்புகள் பதிவாகின்றன. மகாராஷ்டிரத்தில் சராசரியாக நாள்தோறும் 5,000 முதல் 6,000 கரோனா பாதிப்புகள் பதிவாகின்றன. இந்த 2 மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்கிறோம். இந்த மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழை சமர்பிக்காவிட்டால் அவர்கள் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.