பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையுயர்வால் எல்லா பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு எரிபொருள் விலையுயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக ரூ.21 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது கொடூரமானது எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படும் நிலையில், நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை, அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


