சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ரயில்வேயை தனியார்மயம் ஆக்குவது ஏழைகளுக்கு அச்சுறுத்தல்: மத்திய அரசு மீது ராகுல் விமரிசனம்

​ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவது லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு அச்சுறுத்தல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மத்திய அரசை விமரிசித்துள்ளார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 5:39 pm

DIN


ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவது லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு அச்சுறுத்தல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. மத்திய அரசை விமரிசித்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது:

"ரயில்வே துறை நாட்டின் ஒரு அங்கம். அது எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தம். லட்சக்கணக்கான மக்கள் ரயில்வே மூலம் குறைந்த விலையில் பயணம் செய்கின்றனர்.

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் அரசின் நோக்கத்தை கடந்த நிதிநிலை அறிக்கை தாக்கலில் கவனித்தேன். ரயில்வேவைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு இது அச்சுறுத்தல். ரயில்வேவில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் இது பிரச்னையை உண்டாக்கும்" என்றார் ராகுல்.

மலப்புரத்தில் இரண்டு குழந்தைகளுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அதன்பிறகு அவர் கூறுகையில், "அவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். ஒருவர் மருத்துவர் ஆக விரும்புகிறார். மற்றொருவர் பெண் காவலர் ஆக விரும்புகிறார். நலிவுற்றவர்களையும், ஏழைகளையும் பாதுகாப்பதற்காக பெண் காவலர் ஆக வேண்டும் என அவர் விரும்புகிறார். ஏழைகளுக்கு சொந்தமானதை அபகரித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.