பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் 45 கோழிகள் பலி
மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் 45 கோழிகள் பலியாகியுள்ளதாகத் துணை ஆட்சியர் கிரண் மகாஜன் தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் 45 கோழிகள் பலியாகியுள்ளதாகத் துணை ஆட்சியர் கிரண் மகாஜன் தெரிவித்துள்ளார்.
கோழிப் பண்ணையில் 45 கோழிகள் பலியானதைத் தொடர்ந்து மகாராஷ்ரைத்தின் பால்கரில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அடுத்த 24 நாள்களுக்கு அனைத்து கோழிப் பண்ணைகள் மற்றும் கோழி விற்பனை கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 3 நாள்களாகத் தொடர்ந்து கோழிகள் இறந்து கொண்டிருந்த நிலையில், அவற்றின் மாதிரிகள் புணேவைச் சேர்ந்த ஒரு ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...