கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் 45 கோழிகள் பலி

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் 45 கோழிகள் பலியாகியுள்ளதாகத் துணை ஆட்சியர் கிரண் மகாஜன் தெரிவித்துள்ளார். 

News image
பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் 45 கோழிகள் பலி
Updated On :27 ஜனவரி 2024, 7:36 pm

ANI

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் 45 கோழிகள் பலியாகியுள்ளதாகத் துணை ஆட்சியர் கிரண் மகாஜன் தெரிவித்துள்ளார். 

கோழிப் பண்ணையில் 45 கோழிகள் பலியானதைத் தொடர்ந்து மகாராஷ்ரைத்தின் பால்கரில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அடுத்த 24 நாள்களுக்கு அனைத்து கோழிப் பண்ணைகள் மற்றும் கோழி விற்பனை கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 3 நாள்களாகத் தொடர்ந்து கோழிகள் இறந்து கொண்டிருந்த நிலையில், அவற்றின் மாதிரிகள் புணேவைச் சேர்ந்த ஒரு ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.