உத்தரகண்ட் வெள்ளம்: இதுவரை 75 உடல்கள் மீட்பு

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 75 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உத்தரகண்ட் வெள்ளம்: இதுவரை 75 உடல்கள் மீட்பு
உத்தரகண்ட் வெள்ளம்: இதுவரை 75 உடல்கள் மீட்பு
Published on
Updated on
1 min read

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 75 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

30 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 205 பேர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தௌலி கங்கா, ரிஷி கங்கா, அலக் நந்தா நதிகளில் கடந்த 7-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களைத் தேடும் பணியில் மாநில மீட்புப் படையினருடன், தேசிய பாதுகாப்பு மீட்புப் படையினரும், இந்தோ - திபெத் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com