மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,524 பேருக்கு கரோனா; 59 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,524 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,524 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 3,524 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 19,35,636ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 59 பேர் பலியானார்கள். இதுவரை மொத்தம் 49,580 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 4,279 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 18,32,825 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 52,084 சிகிச்சையில் உள்ளனர். தலைநகர் மும்பையில் இன்று 631 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 9 பேர் பலியானார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...